காதல் கடிதம்
காதல் கடிதம்
அன்பின் உங்களுக்கு , ❤❤❤❤
இதுவரை ஏராளமான கடிதங்கள் என்னை வந்தடைந்துள்ளன . இன்னும் வந்த வண்ணமே உள்ளன . உலகம் முடியும் வரை இதற்கு முடிவே இல்லை என்று நினைக்கிறேன் . ஒருவர் இருவர் அல்ல ஒட்டு மொத்த சமூகமும் என்று கூட சொல்லலாம் . அதுவும் சாதாரணக் கடிதமுமல்ல . காதல் கடிதம் .........................
கன்னியர் சங்கத்தின் தலைவி என்ற வகையில் நான் உங்கள் கடிதங்களுக்கான பதில்களைச் சொல்லியாக வேண்டும் . உங்கள் தலைவிதிகளைப் பற்றியும் எனக்கு ஏற்பட்டுள்ள தலைவலி பற்றியும் விளக்கியாக வேண்டும் .
இதுவரை நான் பெற்றுக்கொண்ட காதல் கடிதங்களுள் எத்தனையோ கடிதங்களை நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் . அவரவர்க்கு உரித்தானவர்களிடம் ஒப்படைத்தும் விட்டேன் . அனேகர் அவர்களுடன் இணைந்தும் விட்டார்கள் .

https://cdn.pixabay.com
இத்தனைக்கும் எம் கன்னியர்களில் ஒருவர் கூட ஒரு தெருவில் கூட நடந்து சென்றது கிடையாது . எம் பூமுகங்களை ஒருமுறையேனும் கண்டது கிடையாது . நாமும் எம் இருப்பிடமும் என்றிருக்கிறோம் .
அவர்கள் கேட்கும் படியாக ஒரு வார்த்தையேனும் பேசியது கூட கிடையாது . ஆனால் எம்மைப் பற்றி நீங்கள் தினமும் பேசுகிறீர்கள் . எம் கன்னியரை ஒத்த அழகைக் கூட கண்டிருக்க மாட்டீர்கள் . ஆனால் அன்றாடம் காதலிக்கிறீர்கள் . தினம் தினம் ஐந்து தடவைக்கு அதிகமாகவே கடிதமும் அனுப்புகிறீர்கள் . அதிகாலை , அந்திமாலை , நள்ளிரவு , நடுநிசி என்று அதற்கு காலம் நேரம் கூடாக கிடையாது . உங்கள் காதலின் ஆழத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது .

https://cdn.pixabay.com
✌....✌....✌ ....✌.... ✌ ....✌
ஆனாலும் காதல் என்பதற்காக கண்டதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய எந்தக் கட்டாயமும் எங்களுக்கில்லை . கன்னியர்களாகிய நாங்கள் வித்தியாசமானவர்கள் . சிலருக்கென்றே பிரத்தியேகமானவர்கள் . வர்ணிக்க முடியாத அழகுடையவர்கள் . எங்கள் எச்சிலுக்கே கடல் நீர் முழுவதும் சுவையாகி விடும் . எங்கள் கண்களின் அழகை வர்ணிக்க உலகில் எதுவும் கிடையாது . எங்களின் வெண்மைக்கு முத்துக்கள் கூட ஈடாகாது . இப்படி எவ்வளவோ .................................
இவற்றையெல்லாம் நாம் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டும் என்பதில்லை . அதையெல்லாம் அறிந்ததால் தான் எம் மீது அளவுகடந்து காதல் கொண்டுள்ளீர்கள் . ............................................
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எமக்கென்று தனிச் சிறப்புக்கள் இருப்பது போலவே எம் கன்னியர்களின் காதலர்களுக்கும் நாம் விரும்பும் பண்புகள் இருக்க வேண்டும் .
எங்கள் காதலர்கள் ,
* அழகிலே , அந்தஸ்திலே குறைந்தவர்களாக இருக்கலாம். அதைப்பற்றி எந்த ஆட்சேபமும் எங்களுக்கில்லை .
* அந்நிய பெண்களைத் தீண்டாதவராக தன் பார்வையால் கூட விபச்சாரம் செய்யாதவராக இருக்க வேண்டும் .
* பூமிப்பந்தில் பணிவு என்கின்ற வாகனத்தை அவர் சொந்தமாக்கி இருக்க வேண்டும்.
* பாவங்களில் இருந்து வெளியேற " ஸலாம் " எனும் ஆயுதத்தை அவர் தாங்கியிருக்க வேண்டும் .
* அவரது இரவுகள் இறை தியானத்திற்கு இரவல் போயிருக்க வேண்டும் .
அந்த இரவலுக்கான கூலியாகவே என்னைக் கேட்க வேண்டும் .
* "எங்கள் இரட்சகனே நரகத்தின் வேதனையை எங்களை விட்டும் நீ திருப்பி விடுவாயாக .நிசசயமாக அதன் வேதனை நிலையானதாகும் "
(அல் - புர்கான் ) என்று அவர் பிரார்த்திக்க வேண்டும் .
* அவரது செல்வங்கள் வறுமைக்கு நிழலாக அமைய வேண்டும் . வீண்விரயமோ , கஞ்சத்தனமோ இன்றி இடைப்பட்டதாக அவரது செலவுகள் அமைய வேண்டும்.
* தன்னைப் படைத்தவனுக்கு எதனையும் இணை வைக்காமல் அனுதினமும் அவனிடமே பாவமீட்சி பெற வேண்டும் .
* பொய் சாட்சி சொல்ல மாட்டார் . வீணான கெட்ட காரியங்களின் பால் அகப்பட்டு விட்டால் பணிவாக கண்ணியமாக விலகிச் சென்றுவிடுவார் .
* " எங்கள் இரட்சகனே எங்கள் மனைவியடமிருந்தும் எங்கள் சந்ததிகளிடமிருந்தும் எங்களுக்கு கண்குளிர்ச்சியைத் தருவாயாக .
அன்றியும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை ( நல்வழி நின்று அதன் பால் அழைக்கும் ) வழிகாட்டியாகவும் நீ ஆக்குவாயாக " (அல் - புர்கான் ) என்று வேண்டி நிற்க வேண்டும் .
* மொத்தத்தில் இறைவனுடைய வசனங்களுக்கு முழுமையாய் அடிபணிந்து நடமாடும் குர்ஆனாக அவர் உருப்பெற்றிருப்பார் .
அவர்களுக்குள் ஒருவராக நீங்களும் இருந்தால் காத்திருங்கள் உங்கள் கன்னியருக்காக . உங்களுக்கானது தூய்மையாக உங்களிடமே வந்து சேரும். உங்கள் காதல் கடிதமும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை .
இப்படிக்கு
கண்ணழகிகளின் தலைவி
زوجة عباد الرحمن
உங்கள் முயற்சிகள் தொடரட்டும் . சந்திப்போம் ஒரு நாளில் ...................................
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நான் நேசிக்கும் அவர்
நான் நேசிக்கும் ஒருவரைப் பற்றி ஒரு சில உண்மைகளை மாத்திரம் உரைத்திருக்கிறேன் . அவர் என்னை நேசிக்கிறாரா என்பதை நான் அறியேன் . என்றாலும் நான் அவரை என் உயிரை விட அதிகமாக நேசிக்கிறேன். சில நேரம் நீங்களும் என்னைப் போன்ற ஒருவராக இருக்கலாம் .
படித்துப்பாருங்கள் சில நேரம் பட்டென புரியும் .
இன்னும் சிலர்க்கு தாமதமாகும்.
(இங்கே க்ளிக் செய்யவும் ) Click here
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

https://images.pexels.com
அன்பின் உங்களுக்கு , ❤❤❤❤
இதுவரை ஏராளமான கடிதங்கள் என்னை வந்தடைந்துள்ளன . இன்னும் வந்த வண்ணமே உள்ளன . உலகம் முடியும் வரை இதற்கு முடிவே இல்லை என்று நினைக்கிறேன் . ஒருவர் இருவர் அல்ல ஒட்டு மொத்த சமூகமும் என்று கூட சொல்லலாம் . அதுவும் சாதாரணக் கடிதமுமல்ல . காதல் கடிதம் .........................
கன்னியர் சங்கத்தின் தலைவி என்ற வகையில் நான் உங்கள் கடிதங்களுக்கான பதில்களைச் சொல்லியாக வேண்டும் . உங்கள் தலைவிதிகளைப் பற்றியும் எனக்கு ஏற்பட்டுள்ள தலைவலி பற்றியும் விளக்கியாக வேண்டும் .
இதுவரை நான் பெற்றுக்கொண்ட காதல் கடிதங்களுள் எத்தனையோ கடிதங்களை நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் . அவரவர்க்கு உரித்தானவர்களிடம் ஒப்படைத்தும் விட்டேன் . அனேகர் அவர்களுடன் இணைந்தும் விட்டார்கள் .

https://cdn.pixabay.com
இத்தனைக்கும் எம் கன்னியர்களில் ஒருவர் கூட ஒரு தெருவில் கூட நடந்து சென்றது கிடையாது . எம் பூமுகங்களை ஒருமுறையேனும் கண்டது கிடையாது . நாமும் எம் இருப்பிடமும் என்றிருக்கிறோம் .
அவர்கள் கேட்கும் படியாக ஒரு வார்த்தையேனும் பேசியது கூட கிடையாது . ஆனால் எம்மைப் பற்றி நீங்கள் தினமும் பேசுகிறீர்கள் . எம் கன்னியரை ஒத்த அழகைக் கூட கண்டிருக்க மாட்டீர்கள் . ஆனால் அன்றாடம் காதலிக்கிறீர்கள் . தினம் தினம் ஐந்து தடவைக்கு அதிகமாகவே கடிதமும் அனுப்புகிறீர்கள் . அதிகாலை , அந்திமாலை , நள்ளிரவு , நடுநிசி என்று அதற்கு காலம் நேரம் கூடாக கிடையாது . உங்கள் காதலின் ஆழத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது .

https://cdn.pixabay.com
✌....✌....✌ ....✌.... ✌ ....✌
ஆனாலும் காதல் என்பதற்காக கண்டதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய எந்தக் கட்டாயமும் எங்களுக்கில்லை . கன்னியர்களாகிய நாங்கள் வித்தியாசமானவர்கள் . சிலருக்கென்றே பிரத்தியேகமானவர்கள் . வர்ணிக்க முடியாத அழகுடையவர்கள் . எங்கள் எச்சிலுக்கே கடல் நீர் முழுவதும் சுவையாகி விடும் . எங்கள் கண்களின் அழகை வர்ணிக்க உலகில் எதுவும் கிடையாது . எங்களின் வெண்மைக்கு முத்துக்கள் கூட ஈடாகாது . இப்படி எவ்வளவோ .................................
இவற்றையெல்லாம் நாம் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டும் என்பதில்லை . அதையெல்லாம் அறிந்ததால் தான் எம் மீது அளவுகடந்து காதல் கொண்டுள்ளீர்கள் . ............................................
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எமக்கென்று தனிச் சிறப்புக்கள் இருப்பது போலவே எம் கன்னியர்களின் காதலர்களுக்கும் நாம் விரும்பும் பண்புகள் இருக்க வேண்டும் .
எங்கள் காதலர்கள் ,
* அழகிலே , அந்தஸ்திலே குறைந்தவர்களாக இருக்கலாம். அதைப்பற்றி எந்த ஆட்சேபமும் எங்களுக்கில்லை .
* அந்நிய பெண்களைத் தீண்டாதவராக தன் பார்வையால் கூட விபச்சாரம் செய்யாதவராக இருக்க வேண்டும் .
* பூமிப்பந்தில் பணிவு என்கின்ற வாகனத்தை அவர் சொந்தமாக்கி இருக்க வேண்டும்.
* பாவங்களில் இருந்து வெளியேற " ஸலாம் " எனும் ஆயுதத்தை அவர் தாங்கியிருக்க வேண்டும் .
* அவரது இரவுகள் இறை தியானத்திற்கு இரவல் போயிருக்க வேண்டும் .
அந்த இரவலுக்கான கூலியாகவே என்னைக் கேட்க வேண்டும் .
* "எங்கள் இரட்சகனே நரகத்தின் வேதனையை எங்களை விட்டும் நீ திருப்பி விடுவாயாக .நிசசயமாக அதன் வேதனை நிலையானதாகும் "
(அல் - புர்கான் ) என்று அவர் பிரார்த்திக்க வேண்டும் .
* அவரது செல்வங்கள் வறுமைக்கு நிழலாக அமைய வேண்டும் . வீண்விரயமோ , கஞ்சத்தனமோ இன்றி இடைப்பட்டதாக அவரது செலவுகள் அமைய வேண்டும்.
* தன்னைப் படைத்தவனுக்கு எதனையும் இணை வைக்காமல் அனுதினமும் அவனிடமே பாவமீட்சி பெற வேண்டும் .
* பொய் சாட்சி சொல்ல மாட்டார் . வீணான கெட்ட காரியங்களின் பால் அகப்பட்டு விட்டால் பணிவாக கண்ணியமாக விலகிச் சென்றுவிடுவார் .
* " எங்கள் இரட்சகனே எங்கள் மனைவியடமிருந்தும் எங்கள் சந்ததிகளிடமிருந்தும் எங்களுக்கு கண்குளிர்ச்சியைத் தருவாயாக .
அன்றியும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை ( நல்வழி நின்று அதன் பால் அழைக்கும் ) வழிகாட்டியாகவும் நீ ஆக்குவாயாக " (அல் - புர்கான் ) என்று வேண்டி நிற்க வேண்டும் .
* மொத்தத்தில் இறைவனுடைய வசனங்களுக்கு முழுமையாய் அடிபணிந்து நடமாடும் குர்ஆனாக அவர் உருப்பெற்றிருப்பார் .
அவர்களுக்குள் ஒருவராக நீங்களும் இருந்தால் காத்திருங்கள் உங்கள் கன்னியருக்காக . உங்களுக்கானது தூய்மையாக உங்களிடமே வந்து சேரும். உங்கள் காதல் கடிதமும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை .
இப்படிக்கு
கண்ணழகிகளின் தலைவி
زوجة عباد الرحمن
உங்கள் முயற்சிகள் தொடரட்டும் . சந்திப்போம் ஒரு நாளில் ...................................
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நான் நேசிக்கும் அவர்
நான் நேசிக்கும் ஒருவரைப் பற்றி ஒரு சில உண்மைகளை மாத்திரம் உரைத்திருக்கிறேன் . அவர் என்னை நேசிக்கிறாரா என்பதை நான் அறியேன் . என்றாலும் நான் அவரை என் உயிரை விட அதிகமாக நேசிக்கிறேன். சில நேரம் நீங்களும் என்னைப் போன்ற ஒருவராக இருக்கலாம் .
படித்துப்பாருங்கள் சில நேரம் பட்டென புரியும் .
இன்னும் சிலர்க்கு தாமதமாகும்.
(இங்கே க்ளிக் செய்யவும் ) Click here
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

https://images.pexels.com
No comments: