உமையாக்களின் வீழ்ச்சி

உமையாக்களின் வீழ்ச்சி

இஸ்லாமிய வரலாற்றில் குலபாஉர் ராஷிதீன்களை தொடர்ந்து உமையாக்கள் ஆட்சி ஆரம்பமாகியது . இது முதலாவது பதவி வழி ஆட்சியாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது . உமைய்யா ஆட்சியாளரகள் அவர்களது  வழித்தோன்றல்கள்  தொடராக ஆட்சி செய்து வந்ததால் இவ்வாட்சி உமைய்யா ஆட்சி எனப்படுகிறது . கலிபா  அலி ரழி அவரகலின் கொலையைத் தொடர்ந்து ஈராக்கியர் அலியின் புதல்வர் ஹஸன் ரழி அவர்களையும் ஷாமியர் முஆவியா ரழி அவர்களையும் கலீபாவாக தேர்ந்த்தெடுத்தனர் . இதனை சகித்து கொள்ள முடியாத முஆவியா ரழி அவர்கள் ஈராக்கை நோக்கி பெரும் படையை அனுப்பினார்கள் . அவ்வேளை முஸ்லிம்கள் முஸ்லிம்களால் கொலை செய்யப்படுவதை விரும்பாத ஹஸன் ரழி அவர்கள் தம்மீது சுமத்தப்பட்ட ஆட்சியை முஆவியா ரழி அவர்களுக்கு விட்டுக்கொடுத்தார்கள் .


உமையாக்கள் சுமார் 91 வருடங்கள் இஸ்லாமிய உலகை ஆட்சி புரிந்தனர் . இந்த அடிப்படையில் முஆவியா , அப்துல் மலிக் ,வலீத் , ஹிஷாம் , உமர் இப்னு அப்துல் அஸிஸ் போன்றவர்கலால்  இஸ்லாமிய உலகிற்கு பல்வேறு வகையான வலுக்கல் சேர்க்கப்பட்டன . இந்த வகையில்   ஆட்சி செய்த போதிலும் பல காரணங்களால் உமையா ஆட்சி வீழ்ச்சி அடைந்தது . உமைய வீழ்ச்சிக்கு  அப்பாஸியர் மேட்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து நோக்குவோம் .


உமையாக்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள்


சுமார் ஒரு நூற்றாண்டு கால அளவு ஆட்சி செய்த உமையாக்கள் அகன்ற பரந்த ஒரு இஸ்லாமிய சாம்ராச்சியத்தை கொண்டு இருந்தனர் . இது ஆசிய , ஆபிரிக்க ,ஐரோப்பா ஆகிய கண்டங்களில் இஸ்லாமியக் கொடியை ஏந்திச் சென்றது . இவ்வாறு பல கண்டங்களுக்கு அறிவொளியை ஏந்திச் சென்ற இவ்வாட்சி சுமார் ஒரு நூற்றாண்டின் பின்னர் வீழ்ச்சி கண்டது. இவ்வீழ்ச்சிக்கான காரணங்களை நோக்குவோமாயின் அவை சமைய , சமூக ,அரசியல் , பொருளாதாரக் காரணிகளாகத் தொழிற்பட்டுள்ளமையை அவதானிக்க முடியும்.


1. இஸ்லாமிய ஷரீஆ பேணப்படாமை

நேர்வழிப்பெற்ற நான்கு கலீபாக்கள் சமயத்தையும் அரசியலையும் ஒன்றாகக் கருதி அல்குரான் அஸ்ஸுன்னாஹ் வழி  நின்று தமது ஆட்சியை நிலை நாட்டினர் . அவர்களது காலத்தில் சமயம் வேறு அரசியல் வேறு எனப் பரித்து நோக்கப்படவில்லை . உமையாக் கலீபாக்கள் சமயத்தையும் அரசியலையும் பிரித்து நோக்கியதோடு அரசியலில் சமய வழிகாட்டல்களைப் புறக்கணித்தனர்.மேலும் அரச சபைகள் ஆடம்பர கேளிக்கை விடுதியாக மாற்றம் பெற்றது . இதனால் இஸ்லாத்தின் மீது அதிகப் பற்றும் ஆர்வமும் கொண்டவர்கள் இவர்களது இத்தகைய செயற்பாட்டால் வெறுப்புற்று விலகிக் கொண்டனர்.

2. கோத்திர சண்டைகள்

நபியவர்களால் முதன் முதலாக அழித்து ஒழிக்கப்பட்ட இன  , நிற , பிரதேச  , கோத்திர வேறுபாடுகள் உமையா ஆட்சியில் தூண்டிவிடப்பட்டன . சில கலீபாக்கள் சில கோத்திரங்களுக்கு விசேட சலுகைகளை வழங்கியமை இதற்கு காரணமாக அமைந்தது . இதனால் கோபமுற்ற ஏனைய கோத்திரங்கள் கலீபாக்களிலிருந்து சலுகைகளை பெற்ற கோத்திரங்களுக்கு எதிராக செயட்பட்டனர் . இதற்கு உதாரணமாக ஹலறிகள் - ஹிம்யாரிகளுக்கும் இடையிலும் அவ்வாறே ஹிஜாஸிய அரபிகள் - முளரிகளுக்கும் இடையில் வளர்ந்த முரண்பாடுகளைக் குறிப்பிடலாம் .


3. ஒழுங்கற்ற வாரிசு நியமனம்

வாரிசு உரிமையைப் பொறுத்த மட்டில் கலீபாவாக இருப்பவரின் முத்த புதல்வர் அடுத்த வாரிசாக நியமிப்பதே முறையாகும் . முஆவியா (ரலி ) , முதலாம் யஸீத் (ரஹ் ) , முதலாம் மர்வான் (ரஹ் ) போன்றவர்கள் மாத்திரமே வாரிசு உரிமையைப் பேணி வந்தனர் . ஏனைய கலீபாக்கள் இவ்வொழுங்கு முறையைப் பின்பற்றவில்லை . இதனால் நியாயமான  முறையில் வாரிசு உரிமையை பேண வேண்டியவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

உதாரணம் : அப்துல் மலிக் (ரஹ்) தனது  இரு புதல்வர்களையும் அடுத்தடுத்து வாரிசாக நியமித்தமை .
சுலைமான் தனது சிறிய தந்தையின் மகனான உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)  அவர்களை வாரிசாக நியமித்தமை .

இவ்வாறான ஒழுங்கற்ற வாரிசு நியமனம் உமய்யா குடும்பத்தினுள் முரண்பாடுகளை தோற்றுவித்தது .

4. கலீபாக்களின் பலவீனம்

உமையா ஆட்சியில் பின்வந்த ஆட்சியாளர்கள் திறமை குன்றியவர்களாகவும் போராடும் வலிமையற்றவர்களாகவும் காணப்பட்டனர் . இவர்களது இராச்சிய விஸ்தரிப்பிற்கேற்ப நிர்வாகம் விரிவடைந்து இருக்கவில்லை . கலீபாக்கள் அரசியல் இராஜ தந்திரங்கள் அற்றவர்களாகவும் எதிரிகளை வெற்றி கொள்ளும் தந்திரோபாயம்  அற்றவர்களாகவும் காணப்பட்டனர் . இதனால் நாட்டின் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவு , மக்களது அதிருப்தி , எதிரிகளின் தந்திரோபாயம் என்பவற்றை அவர்கள் கண்டு கொள்ளவில்லை .

5. காலியான திறைசேரி
                                         
உமைய்யா ஆட்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பைத்துல் மால் நிதியை மக்களது தேவைக்காக பயன்படுத்தாது தமது ஆடம்பர சுகபோகங்களுக்காக பயன்படுத்தினர் . இதனால் வெறுப்படைந்த இராணுவ , அரச அதிகாரிகள் மாற்றுத்திசையை வரவேற்க ஆரம்பித்தனர் .

6.அகீதா ரீதியான பிளவுகள்

உமய்யா ஆட்சியின் ஆரம்பம் முதல் கவாரிஜ்களும் , ஷீயாக்களும் உமைய்யாக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேட்கொண்டு வந்தனர் . கலீபா அலி ரழி அவர்களுக்கும் முஆவியா ரழி அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பதவி பிரச்சினை காரணமாக பிரிந்து சென்ற பிரிவினர் அன்று முதல் ஆட்சி அதிகாரம் அஹ்லுல் பைத்தினருக்கே உரித்தானது என வாதிட்டு வந்தனர் . இவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதட்காகவும் தமது கொள்கைகளை உமைய்யா ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் கிளர்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர் . இந்நடவடிக்கை உமைய்யா ஆட்சியை இராணுவ பொருளாதார ரீதியாக பலம் இழக்க செய்தது .

7.மக்கள் அதிருப்தி கொண்டமை.

உமைய்யா ஆட்சியில் அரபிகள் அல்லாத முஸ்லிம்கள் அதிருப்தி கொண்டிருந்தனர் . குறிப்பாக பாரசீக முஸ்லிம்கள் முக்கியமானவர்களாக காணப்பட்டனர் . இவர்கள் உமைய்யா ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டதோடு அவர்களிடம் இருந்து ஜிஸ்யா வரியும் அறவிடப்பட்டன . மேலும் மாவலிகளும் புறக்கணிக்கப்பட்டனர் . இதனால் இவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதல்லாம் உமைய்யாக்களுக்கு எதிராக செயற்பட்டனர் .









































































































No comments:

Powered by Blogger.